நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்

மீரி:

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்த சம்பவத்தில் மூவர் மரணமடைந்த வேளையில் நால்வர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் சரவா, மீரியில் நிகழ்ந்தது என்று சரவா தீயணைப்புப் படையின் நடவடிக்கை பிரிவு தலைவர் ஹெண்டேரி கூறினார்.

இச்சம்பவம் குறித்து மாலை 6.55 மணிக்கு தகவல் கிடைத்தது.

உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் எவிலின் ஷெலி, எடி இன்டாவ், ஜேங்கிங் தின்சோக் ஆகியோர் மரணமடைந்தனர். அதே வேளையில் நான்கு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset