நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை

லாஹாட் டத்து:

லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணமடைந்த வேளையில் மேலும் மூவரை காணவில்லை.

லாஹாட் டத்து தீயணைப்புப் படை தலைவர் சும்சோவா ரஷித் இதனை உறுதிப்படுத்தினார்.

நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கத்தால் 17 பாதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைக்கு தகவல் வந்தது,

இரவு 8 மணிக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் 25 முதல 58 வயது வரை பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் 6 பேர் காணாமல் போனார்கள். இருவர் காயமடைந்தனர். ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் காணாமல் போனவர்களின் மூன்று பேர் நீரில் மூழ்கி மரணமடைந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது.

இன்னும் மூவரை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset