நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விசாரணைக்காக டத்தோ முஹம்மத் தம்ரின் அப்துல் காஃபார் பாபா புக்கிட் அமானிற்கு அழைக்கப்படுவார்:  ரஸாருடின் 

கோலாலம்பூர்: 

முன்னாள் துணைப் பிரதமரின் மகன் டத்தோ முஹம்மத் தம்ரின் அப்துல் காஃபார் பாபா தனது வலைப்பதிவில் அடுத்த 10 ஆண்டுகளில் மலாய்க்காரர்களின் எதிர்காலத்தைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரணைக்காக புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு அழைப்படுவார் என்று தேசிய காவல்துறை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் தெரிவித்திருக்கின்றார். 

அவரது பதிவு தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்பதையும் டான்ஶ்ரீ ரஸாருடின் உறுதிப்படுத்தினார். 

முன்னதாக, தம்ரின் தனது வலைப்பதிவுப் பக்கத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் டிஏபி மலேசியாவை ஆளும் என்ற தலைப்பில் அவர் எழுதியக் கட்டுரை குறித்து காவல்துறையினரால் விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset