செய்திகள் மலேசியா
கோல குபு பாருவில் போட்டியிடும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பற்றி இன்னும் விவாதிக்கவில்லை: பிரதமர் அன்வார்
பத்தாங்காலி:
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இது பற்றி இன்னும் தாம் யாருடனும் விவாதிக்கவில்லை என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் சுருக்கமாக பதில் அளித்தார்.
பத்தாங் காலியில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.
பின்னர் மே 11 ஆம் தேதி வாக்களிப்பு இடம் பெறுகிறது.
இம்முறை நம்பிக்கை கூட்டணி, தேசியக் கூட்டணி இடையே கடுமையான போட்டி நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm