நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் போட்டியிடும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பற்றி இன்னும் விவாதிக்கவில்லை: பிரதமர் அன்வார்

பத்தாங்காலி:

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து இன்னும் விவாதிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இது பற்றி இன்னும் தாம் யாருடனும் விவாதிக்கவில்லை என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் சுருக்கமாக பதில் அளித்தார்.

பத்தாங் காலியில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னிட்டு வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

பின்னர் மே 11 ஆம் தேதி வாக்களிப்பு இடம் பெறுகிறது. 

இம்முறை நம்பிக்கை கூட்டணி, தேசியக் கூட்டணி இடையே கடுமையான போட்டி நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset