நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்தாங் காலி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்:  சூடுப் பிடிக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல்

பத்தாங்காலி:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகலில் பத்தாங் காலியில் வெள்ளிக்கிழமை தொழுகை, ரமலான் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக்கொண்டார்.

பிரதமரின் இந்த வருகை கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலை மேலும் விறுவிறுப்பாக்கி உள்ளது.

உலு சிலாங்கூர் பண்டார் உத்தாமா பத்தாங்காலி பள்ளிவாசலில் மக்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டார். 

பின்னர் நடைபெற்ற நோன்பு பெருநாள் பொது உபசரிப்பிலும் அவர் கலந்து கொண்டார். 

சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார்  டத்தோஸ்ரீ  முகமட் தாயிப், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஜவஹர் அலி, உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து உட்பட ஏராளமானோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

டத்தோ ஜவஹர் அலி 500 பேருக்கு  உணவுப் பொட்டலங்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset