நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யானை மிதித்த ஆடவர் காயமடைந்தார்

கிரிக்:

யானையால் மிதிப்பட்ட ஆடவர் ஒருவர் காயமைந்துள்ளார். இந்தச் சம்பவம் கிரிக் ஜாலான் ராயா திமூர் பராத் கிரிக்-ஜெலி என்ற நினைவு நினைவுச் சின்னம் அருகே நிகழ்ந்தது.

இதனை வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா இலாகா உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் நடந்தது.

இங்கு ஃபெல்டா பெர்சியாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆடவருக்கு விலா எலும்புகள் உடைந்தது.

மேலும் இடது கால் எலும்புகள், தலையில் இரத்தப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்  ஆற்றின் அருகே சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது என்று அவ்விலாகாவின் யூசுப் ஷெரிப் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset