நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்காத தனியார் கிளினிக் மீது விசாரணை நடத்தப்படும்: ஸ்டீவன் சிம் 

கோலாலம்பூர்:

தனியார் கிளினிக்கில் பணிப்புரிந்த பணியாளர்களுக்கான சம்பள நிலுவைத் தொடர்பான பிரச்சனை குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார். 

இப்பிரச்சனை குறித்துத் தமது தரப்பிடம் புகார் அளித்தவர்களுக்குத் தாம் நன்றி தெரிப்பதாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

தற்போது இந்தப் பிரச்சனை மனிதவளத் துறையின் நடவடிக்கையில் உள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக, தனியார் கிளினிக்கில் பணிப்புரியும் பணியாளர் தனக்குச்ம்பளம் வழங்காத தங்களின் முதலாளிகளின் நடவடிக்கைகள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் கவனம் பெற்றது.

கூடுதலாக, ஊழியர் சேம நிதி மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுக்கான பங்களிப்புகள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டாலும் அப்பணம் இரண்டு அமைப்புகளுக்குச் செலுத்தப்படவில்லை என்றும் அப்பணியாளர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset