நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் பாலர் பள்ளிகளுக்கான மித்ரா நிதி தொடரும்: பிரபாகரன் அறிவிப்பு

கோலாலம்பூர்:

தமிழ் பாலர் பள்ளிகளுக்கான 
மித்ரா நிதி திட்டம் தொடரும் என்று அதன் சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பிரபாகரன் உறுதியாக கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு நமது மாணவர்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழ் பாலர் பள்ளிகள் தொடங்கப்பட்டது.

கடந்த காலங்களில் செடிக் வாயிலாக நிதி வழங்கப்பட்டது. அதன் பின் மித்ரா வாயிலாக நிதிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் என்னுடைய தலைமையில் அப் பள்ளிகளுக்கு நிதி தொடர்ந்து வழங்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தது.

தமிழ்க் கல்வி, மாணவர்கள் விவகாரத்தில் மித்ரா தொடர்ந்து கவனம் செலுத்தும். 

அவ்வகையில் தமிழ் பாலர் பள்ளிகளிக்கான மித்ரா நிதி திட்டம் தொடரும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆகவே, இந்த விவகாரத்தில் பாலர் பள்ளி நடத்துனர்கள் கவலைப்பட வேண்டாம்.

காலதாமதம் ஏற்பட்டாலும் நிதி அப் பள்ளிகளுக்கு சென்றடையும். இதில் நான் உறுதியாக உள்ளேன் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset