செய்திகள் மலேசியா
கடற்படை அதிகாரிகளை சுட்ட சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்: ஐஜிபி
கோலாலம்பூர்:
கடற்படை அதிகாரிகளை சுட்ட மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.
குனாக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையின் போது மலேசிய கடற்படை அதிகாரிகள் இருவரை துப்பாக்கியால் சுடப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று சந்தேக நபர்களில் ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
தற்போதைக்கு, சம்பந்தப்பட்ட மற்ற சந்தேக நபர்களை அடையாளம் காண விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகிறது.
ஆனால் சந்தேக நபரின் குடியுரிமையை இன்னும் வெளிப்படுத்த முடியாது.
சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த இருவரில் ஒருவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து தோட்டாவை அகற்றியதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm