நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரு வாகனமோட்டிகளின் விட்டுக்கொடுக்க முடியாத மனப்பான்மை; நெட்டிசன்கள் காட்டம்

கோலாலம்பூர்: 

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நெடுஞ்சாலையில் இரு வாகனமோட்டிகள் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையில் சாலையில் காரை செலுத்தியுள்ளனர். 

அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது. ஹொண்டா சிட்டியும் புரோட்டோன் வாஜா காரும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது. 

இரு கார்களும் மிகவும் அருகருகில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது. த்டீரென்று வாஜா ரக கார் ஹொன்டா சிட்டி காரை மோதிய வேளையில் விபத்தில் சிக்கியது. 

வேக கட்டுப்பாட்டை இழந்த வாஜா ரக கார் சாலை தடுப்பினை மோதியதுடன் தடம் புரண்டது. இருப்பினும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, ஓட்டுநரின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 

சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை சுமார் 4 லட்சம் மேல் பார்த்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset