செய்திகள் மலேசியா
கார்-லோரி இடையிலான விபத்தில் இருவர் மரணம்
நீலாய்:
இன்று காலை சிரம்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் லாரி மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
காலை 10.20 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் பிஎம்டபிள்யூ கார் முற்றிலுமாக எரிந்தது.
காலை 10.25 மணிக்கு சம்பவம் குறித்து தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாக மந்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு இயக்குநர், முஹம்மத் எஃபீண்டி ரஹ்மத் கூறினார்.
விபத்தால் காரில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முயன்றாலும் அக்கார் முழுமையாக எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த இருவரும் மரணமடைந்துள்ளனர்.
தீயணைப்பு துறையினரும் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு?
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm