நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலியர் ஷாலோம் அவிட்டனால் குறிவைக்கப்பட்ட ஆடவர் கைது?

கோலாலம்பூர்:

இஸ்ரேலியர் ஷாலோம் அவிட்டனால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மையில் 6 கைத்துப்பாக்கிகள், 200 தோட்டாக்களுடன் ஷாலோம் அவிட்டனை போலீசார் கைது செய்தனர்.

ஏரன் ஹயா என்ற ஆடவரை குறிவைத்து தான் தாம் மலேசியாவுக்கு நுழைந்ததாக அவிட்டன் விசாரணையின் போது கூறியுள்ளார்.

அவிட்டன் குறிவைத்த ஆடவரை கைது செய்யும் நோக்கில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4,5ஆம் தேதிகளில் கோலாலம்பூர், ஜொகூரில் மேற்கொண்ட சோதனையின் ஏரன் ஹயாவை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துருக்கி - அமெரிக்காவைச் சேர்ந்த ஏரன் ஹயா மலேசியாவுக்கு நுழைய போலந்து கடப்பிதழை பயன்படுத்தியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவர் மலேசியாவுக்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset