நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் சிறுவன் மரணம்: மூவர் படுகாயம்

கூச்சிங்:

கட்டுப்பட்டை இழந்த கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் சிறுவன்  மரணமடைந்த வேளையில் மூவர் படுகாயடைந்தனர்.

இந்த சம்பவம் கூச்சிங் ஜாலான் ஶ்ரீ அமான் - செரியான் செல்லும் சாலையில் நிகழ்ந்தது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சரவா தீயணைப்பு படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதில் 11 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.

அதே வேளையில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும்.

அதே வேளையில் இருவர் சாதாரண காயங்களுடன் தப்பினர் என்று தீயணைப்பு படையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset