நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்தும் ஐ.நாவின் கோரிக்கையை மலேசியா வரவேற்கிறது

புத்ராஜெயா:

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதை அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் தீர்மானத்தை மலேசியா வரவேற்கிறது.

இத்தீர்மானத்தைத் திறம்பட செயல்படுத்துவது உட்பட சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமை  நிறைவேற்றுவதை உறுதி செய்ய அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம், விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. 

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) முன்வைத்த தீர்மானம் மலேசியாவால் அனுசரணை செய்யப்பட்டு ஆதரிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் பேரவையானது நீண்டகால சட்டவிரோத  ஆக்கிரமிப்பு, நிறவெறிக் கொள்கை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப் படுகொலை மற்றும் போர் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் இருந்து பாலஸ்தீன மக்களை பாதுகாக்க ஐ.நா சாசனத்தின் கீழ் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற மலேசியாவின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு  இணங்க இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

மலேசியா பாலஸ்தீனப் பிரச்சனைக்காகப் போராடுவதில் உறுதியாக உள்ளது. 

1967 -ஆம் ஆண்டுக்கு முன் முந்தைய கிழக்கு ஜெருசலாமைத் தலைநகராகக் கொண்ட எல்லைகளின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீனிய அரசை ஸ்தாபிப்பதை நோக்கி தொடர்ந்து பணியாற்றும்.

நாடுகளின் தீர்மானம் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது, காசாவில் பட்டினியை ஒரு போர் முறையாகப் பயன்படுத்துவதைக் கண்டித்தது மற்றும் ரஃபாவில் இஸ்ரேலின் எந்தவொரு பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் எச்சரித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset