நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 லட்சம் ரிங்கிட் கொண்ட பெட்டியின் உரிமையாளர் தொடர்பான விசாரணைக்கு உதவ காவல்துறை மூவரைச் சாட்சியமளிக்க அழைக்கவுள்ளது

கோலாலம்பூர்:

பெட்டாலிங் ஜெயா டாமன்சாராவிலுள்ள பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் 500,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான பணம் இருந்த பயணப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பெட்டியின் உரிமையைப் பற்றிய விசாரணைக்கு உதவ மூவரைக் காவல்துறையினர் சாட்சியமளிக்க அழைக்கவுள்ளனர்.

அழைக்கப்படும் மூன்று சாட்சிகளும் ரொக்கம் அடங்கியப் பெட்டி தனக்குச் சொந்தமானது என்று முன்னர் கூறிய நிறுவன இயக்குநரின் நண்பர்கள் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார். 

மற்ற மூன்று சாட்சிகளைச் சாட்சியமளிக்க அழைப்பது உட்பட பல விஷயங்கள் இன்னும் காவல்துறையினரால் விசாரணையில் உள்ளன.

அவர்கள் ஹரி ராயா பெருநாளுக்குப் பின் அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset