நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிஎஸ்ஐயில் ஆடவரை மிரட்டி பணம் பறித்த இரு காவல்துறை அதிகாரிகள் கைது

ஜொகூர் பாரு: 

சுல்தான் இஸ்கண்டார் கட்டடப்பகுதியில் ஆடவரை மிரட்டி 2000 வெள்ளி பறித்ததாகச் சந்தேகிப்படும் இரு காவல்துறை அதிகாரிகளைக் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். 

32 மற்றும் 33 வயதான இரு காவல்துறை அதிகாரிகள் சுல்தான் இஸ்கண்டார் கட்டடப்பகுதியில் பணியில் ஈடுப்பட்டிருந்த போது  பிற்பகல் 1.50 மணிக்கு கைது செய்ததாக ஜோகூர் காவல்துறை தலைவர் எம்.குமார் கூறினார்.

நேற்று நள்ளிரவு 12.23 மணியளவில், 29 வயதுடைய உள்ளூர் ஆடவர் செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட அவ்விருவரால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறியது குறித்துக் காவல்துறைக்குப் புகார் வந்ததாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் குடிநுழைவு சோதனைக்காகச் சென்றபோது அவர் குற்றப் பின்னணி கொண்டவர் என்று கூறப்பட்டதால், சந்தேகத்திற்குரிய இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஆடவரைத் தடுத்து வைக்கப்பட்டார் என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஆடவரை 2,000 செலுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் மிரட்டியதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 385ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset