செய்திகள் மலேசியா
பிஎஸ்ஐயில் ஆடவரை மிரட்டி பணம் பறித்த இரு காவல்துறை அதிகாரிகள் கைது
ஜொகூர் பாரு:
சுல்தான் இஸ்கண்டார் கட்டடப்பகுதியில் ஆடவரை மிரட்டி 2000 வெள்ளி பறித்ததாகச் சந்தேகிப்படும் இரு காவல்துறை அதிகாரிகளைக் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.
32 மற்றும் 33 வயதான இரு காவல்துறை அதிகாரிகள் சுல்தான் இஸ்கண்டார் கட்டடப்பகுதியில் பணியில் ஈடுப்பட்டிருந்த போது பிற்பகல் 1.50 மணிக்கு கைது செய்ததாக ஜோகூர் காவல்துறை தலைவர் எம்.குமார் கூறினார்.
நேற்று நள்ளிரவு 12.23 மணியளவில், 29 வயதுடைய உள்ளூர் ஆடவர் செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட அவ்விருவரால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறியது குறித்துக் காவல்துறைக்குப் புகார் வந்ததாக அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் குடிநுழைவு சோதனைக்காகச் சென்றபோது அவர் குற்றப் பின்னணி கொண்டவர் என்று கூறப்பட்டதால், சந்தேகத்திற்குரிய இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஆடவரைத் தடுத்து வைக்கப்பட்டார் என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஆடவரை 2,000 செலுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் மிரட்டியதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 385ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am