நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்: ஸாஹித் ஹமிடி

கோலாலம்பூர்: 

ஹரி ராயா பெருநாளுக்காகச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு துணைப் பிரதமர் ஸாஹித் ஹமிடி வலியுறுத்தியுள்ளார். 

பயணத்தைத் தொடங்குவதற்கு முன் வாகனங்களைச் சரி பார்த்தல், முறையான திட்டமிடல் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் சரியான முறையில் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு மக்களுக்கு அவர் நினைவூட்டினார்.

சொந்த ஊருக்குச் செல்லும் மகிழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது என்று அவர் கூறினார். 

நீண்ட பயணத்தை மேற்கொள்ளபவர்கள் அவ்வப்போது ஓய்வெடுக்கும் பகுதிகளில் ஓய்வெடுத்து விட்டுப் பயணத்தைத் தொடரவும் அவர் வலியுறுத்தினார். 

இந்த ஹரி ராயா பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் ஸாஹித் தெரிவித்தார்.  

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset