செய்திகள் மலேசியா
கேகே மார்ட் காலுறை விவகாரம் மதத்தின் பெயரால் கொடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்
கோலாலம்பூர்:
கேகே மார்ட் காலுறை விவகாரத்தில் மதத்தின் பெயரால் கொடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்.
பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் இதனை கூறினார்.
கேகே மார்ட்டில் அல்லாஹ் என்ற வார்த்தையை வைத்து சாக்ஸ் விற்பனை செய்வதை இன்னும் தூண்டிவிடுபவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
மதத்தின் பெயரால் முஸ்லிம் சமூகம் கொடூரமாக நடந்து கொள்ளக் கூடாது.
இஸ்லாம் தனது மக்களை அப்படிச் செய்யச் சொல்லவில்லை.
காலுறை விவகாரம் முஸ்லிம்களின் கோபத்தை வரவழைக்கிறது என்ற எச்சரிக்கையை அனைத்துத் தரப்பினரும் பெற்றுள்ளனர் என்று நான் நினைக்கிறேன்.
ஆகவே இந்தச் செய்தி மிகத் தெளிவாக உள்ளது.
மதம், இனத்துக்காகப் போராடும் பிரச்சினையை தொடர்ந்து விளையாடுவதற்கான நேரம் இதுவல்ல என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm