செய்திகள் மலேசியா
கோல குபு பாருவை கைப்பற்றும் கனவை தேசியக் கூட்டணி கைவிட வேண்டும்: டாக்டர் சத்தியபிரகாஷ்
உலுசிலாங்கூர்:
கோல குபு பாருவை கைப்பற்றும் கனவை தேசியக் கூட்டணி கைவிட வேண்டும
உலு சிலாங்கூர் நம்பிக்கை கூட்டணி தலைவர் டாக்டர் சத்தியபிரகாஷ் இதனை கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் நாங்கள் வரவேற்கிறோம்.
அதே வேளையில் தேசியக் கூட்டணிக்கு குறிப்பாக பாஸ் கட்சிக்கு ஆதரவாக பல இந்தியத் தலைவரகள் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு எனது அறிவுரையை கூறிக் கொள்கிறேன்.
இந்தத் தொகுதியை கைப்பற்றும் கனவை அவர்கள் கைவிட வேண்டாம்.
மறைந்த லீ கீ ஹியோங்கின் சாதனைகளால் இந்த இடைத்தேர்தலில் தேசியக் கூட்டணியின் வெற்றிக்கு தீர்க்கமாக இருக்கும்.
ஜசெக தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற மாநில சட்டமன்றத் தொகுதியை தேசியக் கூட்டணி கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது என்று பாஸ் செயலாளர் தகியூடின் ஹசான் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த டாக்டர் சத்திய பிரகாஷ் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm