நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மரணம், 2 பேர் படுகாயம்

கோலாலம்பூர்:

விரைவுப் பேருந்து உட்பட ஏழு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் நான்கு சக்கர ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு சுங்கை பூலோ மருத்துவமனை அருகே  வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 425.6  கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இரவு 11.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பலத்த காயமடைந்த இருவரில் ஒருவர்  நான்கு சக்கர வாகனத்தில் பயணித்தவராவர்.

மற்றொருவர் ஹோண்டா ஏக்கோர்ட் கார் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் தீயணைப்பு படையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்ற ஆறு பேர் சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அனைத்து  24 பயணிகள், இரண்டு விரைவு பேருந்து ஓட்டுநர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset