நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிக்குச் சென்ற சகோதரர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணம் 

சுங்கை சிப்புட்: 

நேற்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த இரு சகோதரர்கள் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். 

ஜாலான் ஈப்போ-கோலா கங்சரின் கிலோமீட்டர் (கிமீ) 38.9 இல் அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய அஹம்மத் ஜுஹால் நோரஸ்லான் மற்றும் 13 வயதுடைய அவரது சகோதரர் 13 வயதுடைய அஹம்மத் மாரிக் நோரஸ்லான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட இரு சகோதரர்களும் மோட்டார் சைக்கிள்களில் சிம்பாங் பெலுரு இடைநிலைப்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

எதிர் திசையிலிருந்து வந்த வாகனத்திற்கும் பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் மோதியது.

சுங்கை சிப்புட் மாவட்டக் காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முஹம்மத் கைசாம் அஹம்மத் ஷஹாபுடினைத் தொடர்பு கொண்டபோது இச்சம்பவத்தை உறுதி செய்தார்.

நேற்று காலை 7.12 மணிக்கு விபத்து குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset