செய்திகள் மலேசியா
தாப்பாவில் 800க்கும் மேற்பட்ட வசதிக் குறைந்த மக்களுக்கு பெருநாள் அன்பளிப்பு: டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
தாப்பா:
தாப்பாவில் 800க்கும் மேற்பட்ட வசதிக் குறைந்த மக்களுக்கு பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் அம்மக்களை நேரடியாக சந்தித்து இந்த உதவிகளை வழங்கினார்.
தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் நோன்பு பெருநாளை கொண்டாட வேண்டும்.
குறிப்பாக பெருநாள் காலங்களின் வசதிக் குறைந்த மக்கள் சுமைகள் குறைக்கப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் இன்று 800க்கும் மேற்பட்ட வசதிக் குறைந்த மக்களுக்கு இதன் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
நோன்பு பெருநாள் போன்ற காலங்களில் இதுபோன்ற உதவிகள் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
அதே வேளையில் தாப்பா நாடாளுமன்ற மக்களுக்கான தேவைகள் அவ்வப்போது பூர்த்தி செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm