நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பாவில் 1,000 மாணவர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு: டத்தோஶ்ரீ சரவணன் வழங்கினார்

தாப்பா:

தாப்பாவில் 9 பள்ளியைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் இந்த அன்பளிப்பை வழங்கினார்.

நோன்பு பெருநாள் அடுத்த வாரம் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

இந்த பெருநாளை கொண்டாட இஸ்லாமிய அன்பர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தாப்பாவில் 9 இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கினார்.

படிவம் 5, 6ஐச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.

குறிப்பாக அனைத்து இன மாணவர்களுக்கும் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset