
செய்திகள் மலேசியா
நினைவுகளுக்கு புத்துயிர் அளித்த ஒன்றுக்கூடல்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுசேர்ந்த நண்பர்கள்
பெட்டாலிங் ஜெயா,
மலாயா பல்கலைக்கழகத்தின் 1995ஆம் ஆண்டு கால்பதித்த மாணவர்கள், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் ஒன்று கூடிய தருணம் அண்மையில் அப்பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க கட்டடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பல ஆண்டுகளாக 1995 மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் 4 மாதங்களில் இது சாத்தியமானது என விழாவின் ஏற்பாட்டுக்குழு தலைவர் சரவணன் தெரிவித்தார்.
நினைவுகளை மீட்டெடுத்தோம்
“இந்த ஒன்றுகூடல் விழா, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத தருணமாக அமைந்துள்ளது. மறக்க முடியாத தருணங்களும், சில மறந்த நினைவுகளும் மீண்டும் உயிர் பெற்றது,” என்று அவர் கூறினார்.
அத்துடன், நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய ஒவ்வொருவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார். “இந்த சந்திப்பை ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் நோக்கத்துடன், இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்போம்,” என்றும் அவர் உறுதியளித்தார்.
சுமார் 1995ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தின் கால்பதித்த 72 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், பலரும் தங்களின் மாணவ கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
வாழ்கின்றவர்களின் முன்னேற்றத்தைப் பாராட்டியதோடு, இப்போது இல்லாத சில நண்பர்களுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தினர்
இந்த சந்திப்பு, கல்வி காலத்தின் நினைவுகளை மட்டுமல்ல, அதனை மீண்டும் வாழ்ந்த உணர்வையும் அனைவருக்கும் தந்தது
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 11:27 am
சுற்றுலாப் பேருந்துகளில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருக்கை பட்டை அணிவது கட்டாயம்
June 30, 2025, 10:16 am