
செய்திகள் மலேசியா
பூலாவ் பெர்ஹெந்தியான் கடலில் படகு கவிழ்ந்த சம்பவம்: படகு ஓட்டுநருக்கு போதைப்பொருள் வழக்கில் 3 நாட்கள் தடுப்புக்காவல்
செத்தியூ:
பூலாவ் பெர்ஹெந்தியான் கடலில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் தொடர்புடைய படகு ஓட்டுநருக்கு போதைப்பொருள் வழக்கில் 3 நாட்கள் தடுப்புக்காவல் விதிக்கப்பட்டது.
செத்தியூ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் நூர்லியானா முகமட் சுக்ரி இந்த தடுப்பு காவல் உத்தரவை பிறப்பித்தார்.
பூலாவ் பெர்ஹெந்தியானில் 15 பேர் பயணித்த படகு கவிழ்ந்ததுல் மூன்று பேர் மரணமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் படகு ஓட்டுநர் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
22 வயதான அவ்வாடவர் இன்று காலை செத்தியூ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1957 இன் பிரிவு 15(1)(ஏ) இன் கீழ் மாஜிஸ்திரேட் நூர்லியானா அந்த ஆடவருக்கு மூன்று நாள் தடுப்பு காவல் விதித்தார்.
ஐந்து குற்றப் பதிவுகள் இருப்பது உறுதிசெய்யப்பட்ட சந்தேக நபர், படகு சம்பவத்திற்குப் பிறகு போதைப்பொருள் பயன்படுத்தியதாக சோதனை செய்யப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 4:59 pm
பிரதமர் நாளை தொடங்கி மூன்று நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ தொடர் பயணங்களைத் தொடங்குகிறார்
June 30, 2025, 4:56 pm