நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிமன்ற விவகாரங்களில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை: பிரதமர்

புத்ராஜெயா:

நீதித்துறை நியமனத்திலோ அல்லது நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளிலோ நான் ஒருபோதும் தலையிடுவது இல்லை.

அதே வேளையில் நாட்டின் சட்ட நிறுவனங்களின் சுதந்திரக் கொள்கையை மதிக்கிறேன் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

நீதிபதிகள் உட்பட எந்தவொரு அரசு ஊழியரின் நியமனம் அல்லது ஒப்பந்த நீட்டிப்பு தொடர்பான அனைத்து செயல்முறைகளும் நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

எந்தவொரு தரப்பினரின் பிரச்சாரங்கள் அல்லது அழுத்தங்களால் பாதிக்கப்படக்கூடாது.

ஒரு அரசு ஊழியர் அல்லது நீதிபதி ஓய்வு காலம் ஒரு நடைமுறைக்கு உட்பட்டதாகும். நாம் ஓய்வு பெறும்போது. அது தானாகவே தொடராது.

ஆனால் இந்த விவகாரத்தில் நான் கடுமையாக தாக்கப்படுகிறேன். ஒரு சிலர் நியமனத்தை தொடர வேண்டும் என்கிறார்கள். ஓறூ ஸீளாற் நியமனத்தை தொடர வேண்டாம்.

இதன் பொருள் என்னவென்றால், நேர்மை, சுதந்திரமாக இருக்க வேண்டிய நிறுவனம் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது.

செயல்முறையை பின்பற்றி தான் இது நடந்தது. சிலர் இது பிரதமரின் முழுமையான அதிகாரம் என்றும் கூறுகிறார்கள்.

குற்றம் சாட்டுபவர்கள் அரசியலமைப்பைப் புரிந்து கொண்டால், நிச்சயமாக செயல்முறை தெரியும்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset