நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழாவில் டத்தோஶ்ரீ சரவணன் சிறப்புரையாற்றவுள்ளார்

கோலாலம்பூர்:

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழாவில் மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் சிறப்புரையாற்றவுள்ளார்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 38 ஆவது தமிழ் விழா அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் எண்மர் அடங்கிய குழு இன்று அமெரிக்கா பயணம் ஆகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாள் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடும் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும். தொடர்ந்து தமிழர்களின் கலை கலாச்சார பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

இதில் உலகத் தமிழர்களின் ஆளுமையாக, முக்கியப் பிரமுகராக டத்தோஸ்ரீ சரவணன் சிறப்புரையாற்றவுள்ளார்.

நேற்று கண்ணதாசன் விழா இன்று தமிழ் விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கப் பயணம் என்று உலகளவில் தமிழ் மொழியையும், தமிழர் கலாச்சாரத்தையும் புகழ் மணம் பரப்பி வருகிறார் டத்தோஸ்ரீ எம்.சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset