நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்எஸ்டி விவகாரத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள தயார்; ஆனால்  விமர்சனங்கள் உண்மையாக இருக்க வேண்டும்: பிரதமர்

புத்ராஜெயா:

எஸ்எஸ்டி விவகாரத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள தயார். ஆனால் விமர்சனங்கள் உண்மையாக இருக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

நாட்டில் எஸ்எஸ்டி எனப்படும்  விற்பனை சேவை வரி விரிவுபடுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான விமர்சனங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் உண்மைகளின் அடிப்படையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

வரி விதிப்பு முறையின் வரம்பை விரிவுபடுத்துவது தொடர்பான முடிவு பெரும்பான்மையான மக்கள் மீது சுமையை ஏற்படுத்தாமல் எடுக்கப்பட்டது.

எஸ்எஸ்டி தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டில் மாணவர்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக புகார் கூறியதைக் கண்டேன்.

இந்த குற்றச்சாட்டு உண்மையா என்று எனக்குப் புரியவில்லை. காரணம் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு மின்சாரக் கட்டணம் வசூலிக்கிறதா என்பது தான் என்னுடை கேள்வி.

அப்படியே அது உண்மையாக இருந்தால், நாம் அதை சரிசெய்ய வேண்டும். எனக்குத் தெரிந்தவரை பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அவதூறுக்கான சுதந்திரம் இப்போது  அவமானப்படுத்தும் இடமாகவும் மாறிவிட்டதால் இதுபோன்ற விஷயங்கள் பரப்பப்படுகின்றன.

ஆகையால் அனைவரும்  தயவு செய்து உண்மை தகவல்களை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.

மக்கள் கண்டிப்பதிலும் விமர்சிப்பதிலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset