
செய்திகள் மலேசியா
ஆலய பணியாளர்கள் பாதுகாப்பை இழப்பதால் சுயதொழில் செய்பவர்களுக்கான பாதுகாப்புத் திட்டத்தின் ஒதுக்கீட்டை அரசு அதிகரிக்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர்:
பல ஆலய பணியாளர்கள் பாதுகாப்பை இழப்பதால் சுயதொழில் செய்பவர்களுக்கான பாதுகாப்புத் திட்டத்தின் ஒதுக்கீட்டை அரசு அதிகரிக்க வேண்டும்.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.
சுயதொழில் செய்பவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்ட மானியத் திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தில் பங்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.
ஆனால் இத்திட்டத்தின் கீழ் பல ஆலய பணியாளர்கள் இன்னும் அதன் பலன்களை அனுபவிக்கவில்லை. இது மஹிமாவுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் திட்டம் அர்ச்சகர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள், குமஸ்தா, சமையல்காரர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற ஆலய பணியாளர்களுக்கு பயனளிக்க வேண்டும்.
ஆனால் பல ஆலய பணியாளர்களுக்கு இந்தத் திட்டம் இருப்பது தெரியாது.
இந்தத் திட்டத்தைப் பற்றி அறிய முன்முயற்சி எடுக்காமல் அவர்கள் இன்னமும் அரசாங்கத்தின் உதவிக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
இந்தத் திட்டம் அதன் அதிகபட்ச ஒதுக்கீட்டை எட்டியுள்ளது.
இதனால் அவர்களின் பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பை இப்போது பெற முடியாது என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சுயதொழில் செய்பவர்களுக்கான பாதுகாப்புத் திட்டத்தின் ஒதுக்கீட்டை அரசு அதிகரிக்க வேண்டும்.
இதன் மூலம் ஆலய பணியாளர்களும் பயன் பெறுவார்கள் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 4:59 pm
பிரதமர் நாளை தொடங்கி மூன்று நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ தொடர் பயணங்களைத் தொடங்குகிறார்
June 30, 2025, 4:56 pm
தெங்கு மைமுன் பதவிக் காலம் நீட்டிப்பு; நீதித்துறை சர்ச்சைகளை மோசமாக்கும்: ரபிசி
June 30, 2025, 11:27 am