நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுற்றுலாத் தளங்களில் மக்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களில் மக்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வேண்டும்.

நீலாய் சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளரும் சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவருமான டத்தோ வி. சரவணக் குமார் இதனை வலியுறுத்தினார்.

திரெங்கானுவில் உள்ள பூலாவ் பெர்ஹெந்தியானில் 15 பேர் பயணித்த படகு கவிழ்ந்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த சம்பவத்தில் எஸ். ஆறுமுகம் (40), அவரது மகள் ஏ. சர்விஹ்கா (3), வி. வெண்பனி (10) ஆகியோர் உயிரிழந்தனர்.

நாட்டில் புகழ் பெற்ற சுற்றுலாத் தளங்களில் பூலாவ் பெர்ஹெந்தியானும் ஒன்றாகும். மலேசியர்களை தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

இப்படிப்பட்ட இடத்தில் மக்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். 

கடல் பகுதி நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடும் பட்சத்தில் அங்கு முழு நேர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.'

இதன் வாயிலாக இதுபோன்ற சம்பவங்களை நாம் தடுக்க முடியும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset