
செய்திகள் மலேசியா
சபா சுரங்க உரிம ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், தொழிலதிபரும் மறுத்தனர்
கோத்தா கினபாலு:
சபா சுரங்க உரிம ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், தொழிலதிபரும் மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு சபா மாநிலத்தில் கனிம சுரங்க உரிமங்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் டத்தோ ஆண்டி முஹம்மது சூர்யாடி பாண்டி, டத்தோ யூசோப் யாக்கோப் ஆகிய இருவர் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் முறையே 200,000, 150,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் தொழிலதிபர் சியெங் ஆல்பர்ட் டீ ஜியானின் மீது லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜேசன் ஜூகா முன் அவர்கள்மீதான குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இக்குற்றச்சாட்டுகளை மூவரும் மறுத்து விசாரணை கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 4:59 pm
பிரதமர் நாளை தொடங்கி மூன்று நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ தொடர் பயணங்களைத் தொடங்குகிறார்
June 30, 2025, 4:56 pm