நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுற்றுலாப் பேருந்துகளில் ஜூலை 1ஆம் தேதி  முதல் இருக்கை பட்டை அணிவது கட்டாயம்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் விரைவு, சுற்றுலாப் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் இருக்கை வார் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை வெளியிட்டது.

2020ஆம் ஆண்டு முதல் தயார் செய்யப்பட்ட விரைவுப் பேருந்துகள் அனைத்திலும் கட்டாயம் இருக்கை வார் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்தது.

பேருந்து நிறுவனங்கள் இருக்கை வார் அமைக்க போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

மேலும் போக்குவரத்து நிறுவனங்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பேருந்து புறப்படும்போது அனைத்துப் பயணிகளும் இருக்கை வார் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை குறிப்பிட்டது. 

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இருக்கை வார் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்கள், பயணிகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு 300 ரிங்கிட் அழைப்பாணை அனுப்பப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். 

மலேசியாவில் பாதுகாப்பான போக்குவரத்தை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் மிக முக்கியமானது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset