
செய்திகள் மலேசியா
பூலாவ் பெர்ஹெந்தியானில் படகு கவிழ்ந்த சம்பவம்; மலேசிய கடல்சார் அமலாக்க இலாகா விரிவான விசாரணையை மேற்கொள்ளும்: டத்தோ ரோஸ்லி
பெசுட்:
பூலாவ் பெர்ஹெந்தியானில் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் மலேசிய கடல்சார் அமலாக்க இலாகா விரிவான விசாரணையை மேற்கொள்ளும்.
அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ முகமட் ரோஸ்லி அப்துல்லா இதனை தெரிவித்தார்.
திரெங்கானு பெசுட்டில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூன்று பேர் மரணடைந்தனர். 15க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மலேசிய கடல்சார் அமலாக்க இலாகா விரிவான விசாரணையை மேற்கொள்ளும்.
மேலும் இந்த சம்பவம் படகு புயலில் மோதியதால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இருப்பினும், நாங்கள் போலிஸ்படை பிற நிறுவனங்களுடன் சேர்ந்து விரிவான விசாரணையை மேற்கொள்வோம்.
பாதிக்கப்பட்டவர்களையும் தனது தரப்பினர் தொடர்பு கொண்டுள்ளது,
படகின் வழிசெலுத்தலைப் பார்ப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 4:59 pm
பிரதமர் நாளை தொடங்கி மூன்று நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ தொடர் பயணங்களைத் தொடங்குகிறார்
June 30, 2025, 4:56 pm