நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு சட்டமன்றத் இடைத் தேர்தல் மே 11ஆம் தேதி நடைபெறும்: ஏப்ரல் 27ல் வேட்புமனு தாக்கல்

புத்ராஜெயா:

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 27ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ  அப்துல் கனி சாலே கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ இயோங் மரணமடைந்ததை தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் அறிவித்தார்.

இந்நிலையில் கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை நிர்ணயிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இடைத் தேர்தல் மே 11ஆம் தேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதே வேளையில் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும்.

முன் கூட்டியே வாக்களிப்பு மே 7ஆம் தேதி நடைபெறும்.

இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 40,226 பேர் வாக்களிக்கவுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset