செய்திகள் மலேசியா
கோல குபு பாரு சட்டமன்றத் இடைத் தேர்தல் மே 11ஆம் தேதி நடைபெறும்: ஏப்ரல் 27ல் வேட்புமனு தாக்கல்
புத்ராஜெயா:
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 27ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் கனி சாலே கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ இயோங் மரணமடைந்ததை தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் அறிவித்தார்.
இந்நிலையில் கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை நிர்ணயிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இடைத் தேர்தல் மே 11ஆம் தேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதே வேளையில் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும்.
முன் கூட்டியே வாக்களிப்பு மே 7ஆம் தேதி நடைபெறும்.
இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 40,226 பேர் வாக்களிக்கவுள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm