செய்திகள் மலேசியா
பெருநாள் காலத்தில் சிலாங்கூரில் 382 ஜேபிஜே அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்
பெட்டாலிங் ஜெயா:
ஏப்ரல் 1 முதல் 20 வரை மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கையில் போக்குவரத்து விதிகளைக் கண்காணிக்கவும், சாலை பயனர்கள் விதிகளை கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை ஜேபிஜே) மொத்தம் 382 அதிகாரிகளைப் பணியமர்த்தியுள்ளனர்.
சாலைப் பயனாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான சுமூகமான பயணத்தை உறுதிசெய்யவும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் பாதுகாப்பான இயக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும் சிலாங்கூர் ஜேபிஜே இயக்குநர் அஸ்ரின் போர்ஹா கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது, சிலாங்கூர் ஜேபிஜே முக்கிய சாலைகளிலும் அதிக சாலை விபத்துகள் நிகழும் இடங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
வேக வரம்பை மீறுதல், சமிஞ்சை விளக்கை மீறி செல்லுதல், வாகனம் ஓட்டும்போது கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்துதல், அவசரப் பாதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஒன்பது பெரிய குற்றங்களுக்கு கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கையில், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக டிப்போவில் பேருந்துகளின் தொழில்நுட்ப ஆய்வுகளையும் மேற்கொள்ளப்படும்.
இதற்கிடையில், சாலை மறியலின் போது, 497 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் இதன் விளைவாக பல்வேறு குற்றங்களுக்காக 340 சம்மன்கள் அனுப்பப்பட்டதாகவும் அஸ்ரின் கூறினார்.
மேலும், வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஏழு அறிவிப்புகள், ஆய்வு உத்தரவுகளின் 8 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், 40 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm