செய்திகள் மலேசியா
பிரதமர் துறையின் கீழ் மித்ரா நிலை நிறுத்தப்பட வேண்டும்: டத்தோ நெல்சன்
கோலாலம்பூர்:
பிரதமர் துறையின் கீழ் மித்ரா தொடர்ந்து நிலை நிறுத்தப்பட வேண்டும்.
இதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று மஇகா கல்விக் குழுத் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் வலியுறுத்தினார்.
இந்திய சமுதாயத்தின் உருமாற்றத் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் ஆரம்பத்தில் செடிக், தற்போது மித்ரா தொடங்கப்பட்டது.
பிரதமர் துறையில் கீழ் இருந்தால் மித்ராவின் திட்டங்கள், நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படாது என்பது தான் உண்மை.
ஆனால் பிரதமர் துறைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சுக்கும் இந்த மித்ரா பந்தாடப்பட்டு வருகிறது.
அப்படி தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு மித்ரா மாற்றப்பட்ட விவகாரத்திற்கு மஇகா உட்பட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் பலனாக மித்ரா தற்போது மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்திய சமுதாயத்தின் குரலுக்கு செவிமடுத்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்றி.
அதே வேளையில் மித்ரா தொடர்ந்து பிரதமர் துறை நிலைநிறுத்தப்பட வேண்டும்.
அரசாங்கம் மாறினாலும் மித்ராவில் நிலை மாறக்கூடாது.
இதனை அரசு உறுதி செய்ய வேன்டும் என்று செனட்டர் டத்தோ நெல்சன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm