செய்திகள் மலேசியா
நஜீப்புடைய வீட்டுக் காவலை ஆதரித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முக்கிய சாட்சி தயார்: வழக்கறிஞர்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் எஞ்சிய 6 ஆண்டு சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க விரும்பும் நீதித்துறை மறு ஆய்வுக்கு ஆதரவாக ஒரு முக்கிய சாட்சி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளார்.
இன்று காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிர்வாகம் நடைபெற்றது.
இதற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் முஹம்மது ஷாபி அப்துல்லா இதனை உறுதிப்படுத்தினார்.
எனினும், சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சி யார் என்பதை அவர் வெளியிடவில்லை.
வழக்கு நிர்வாகத்தின் போது வழக்கறிஞர் ஷாபி முக்கியமான சாட்சி குறித்து நீதிபதி அமர்ஜித் சிங்கிடம் தெரிவித்தார் என நம்பப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm