நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சுல்தான், பிரதமர் அன்வார் மக்களுடன் சேர்ந்து நோன்பு திறந்தனர்

ஷாஆலம்:

புக்கிட் ஜெலுத்தோங்கில் உள்ள தெங்கு அம்புவான் ஜெமா பள்ளிவாசலில் மக்களுடன் சேர்ந்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா நோன்பை திறந்தார்.

மாலை 6.30 மணியளவில் அவருடன் இணைந்து சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின், சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா ஆகியோரும் வந்தனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பெட்டாலிங் மாவட்டத்தைச் சேர்ந்த 489 வசதிக் குறைந்த மக்களுக்கு சுல்தான் ஷராபுடின் பெருநாள் அன்பளிப்பை வழங்கினார். 244,500 ரிங்கிட்டை அவர் பகிந்தளித்தார்.

மேலும் சுல்தான் ஷராபுடினிடம் ன், சைம் டார்பி சொத்துடமை பெர்ஹாட்,  செல்காம் டிஜி பெர்ஹாட் ஆகியவற்றிலிருந்து முறையே 2 மில்லியன் மற்றும் 1.36 மில்லியன்  ரிங்கிட் ஜகாத் தொகைகளுக்கான காசோலைகளை வழங்கின.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset