செய்திகள் மலேசியா
அதிகாரம் என்பது சலுகையல்ல; அது நம்பிக்கையாகும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
அதிகாரம் என்பது மக்களுக்குச் சிறப்பாகச் செயல்பட வேண்டிய நம்பிக்கையைக் குறிப்பதாகவும் அது சலுகையல்ல என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இஸ்லாத்தின் வலுவான பற்றைத் தமது கட்சி கொண்டிருப்பதாகவும் இந்தப் பற்று ஒரு சூழ்நிலையை சரியான, துல்லியமான மற்றும் பொருத்தமான நிலைக்குத் திருப்புவதற்கான முயற்சியாகும் என்று பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் கூறினார்.
எனவே, கொள்கைகளை உருவாக்குவதில் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் முதன்மையாக இருக்க வேண்டும்.
இன்று சுமக்கப்படும் கடமைகள் மற்றும் பொறுப்புகள் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் மேற்கொள்ள வேண்டிய நம்பிக்கைகள் என்று அவர் இன்று பிகேஆர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm