செய்திகள் மலேசியா
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ மலேசியா வந்தடைந்தார்
சுபாங்:
இந்தோனேசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரும் பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாண்டோ ஒரு நாள் பயணமாக மலேசியா வந்தடைந்தார்.
சிறப்புக் குழுவுடன் பிரபாவோ வந்த சிறப்பு விமானம் நேற்று இரவு 10.15 மணியளவில் இங்குள்ள சுபாங் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்ம்மது காலித் நோர்டின் அவரை வரவேற்று சிறப்பித்தார்.
2024-2029 தவணைக்கான இந்தோனேசிய அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பிரபோவோவின் முதல் மலேசியப் பயணம் இதுவாகும்.
அவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் பெர்டானா புத்ராவில் இன்று சந்திக்க இருக்கிறார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm