நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா விவகாரத்தில் சமுதாயத்தின் கோரிக்கைக்கு செவிசாய்த்த பிரதமருக்கு நன்றி: டத்தோ ரமணன்

கோலாலம்பூர்:

மித்ரா விவகாரத்தில் சமுதாயத்தின் கோரிக்கைக்கு செவிசாய்த்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றி.

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் இதனை தெரிவித்தார்.

பிரதமர் துறையின் கீழ் இருந்த மித்ரா கடந்தாண்டு இறுதியில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு மாற்றப்பட்டது.

மாற்றப்பட்டது முதல் பல சர்ச்சைகள் எழுந்தது.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் சமுதாய மக்கள் என அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்திய சமுதாய மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்த பிரதமருக்கு எனது நன்றி.

அதே வேளையில் பிரதமர் துறை கீழ் செயல்படும் மித்ரா அதன் நிதியை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

இதனிடையே இந்தியர்களின் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பிரதமருக்கு நன்றி. 

இந்தப் பிரச்சினைகளில் என்னுடன் இணைந்து குரல் கொடுத்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள், அரசு சாரா இயக்கங்கள், இந்திய சமூகம் என அனைவருக்கும் நன்றி என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவருமான பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset