நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் வழக்கு; அமீர் நேரில் ஆஜராகி விளக்கம் 

சென்னை:

ஜாபர் சாதிக்குடன் இருந்த தொடர்பு குறித்து டில்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் திரைப்பட இயக்குனர் அமீர் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

டில்லியில் 3 பேர் போதைப் பொருளுடன் பிடிபட்ட நிலையில் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது. 

இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்தது.

மேலும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்து.

ஏப்ரல் 2ஆம் தேதி அமீர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர். 

இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் டில்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜராகியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset