நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்ட 16 டன் சார்டின்  பறிமுதல்

ஜொகூர்பாரு:

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்ட 16 டன் சார்டின் உணவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லோரியில் ஜொகூருக்குள் கொண்டுசெல்லப்பட்ட அந்த உணவின் மதிப்பு 83,879 ரிங்கிட்  என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
1,600 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அந்த சார்டின் உணவை மலேசியாவில் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை.

30 வயது லாரி ஓட்டுநரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அனுமதியில்லாத பொருளை ஜொகூருக்குள் இறக்குமதி செய்யும் குற்றத்துக்கு கூடியபட்சம் 100,000 ரிங்கிட் அபராதம், 6 ஆண்டுகளுக்கு மேல்போகாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset