நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலிய ஆடவர் கைது விவகாரம்; இன்னும் அதிகமான சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு 

கோலாலம்பூர்: 

இஸ்ரேலிய ஆடவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்னும் அதிகமான சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலைவீசி தேடி வருவதாக அரச மலேசிய போலீஸ்படையின் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறினார். 

இஸ்ரேலிய ஆடவர் மலேசியாவில் ஏன் இருக்கிறார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. 

அத்துடன் இந்த விவகாரத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் இதில் சம்பந்தப்பட்டிருக்க கூடும் என்று அவர் கோடிக்காட்டினார். 

இஸ்ரேலிய ஆடவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில்  23 க்கும் மேற்ப்பட்டோரிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த வாரம் 36 வயதான இஸ்ரேலிய ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஜாலான் அம்பாங்கில் உள்ள தங்கும் விடுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset