செய்திகள் மலேசியா
தொழிற்கல்லூரி மாணவர் கொலை: 13 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு
லாஹாட் டத்து:
கடந்த மாதம் லாஹாட் டத்து தொழிற்கல்லூரியில் 17 வயது மாணவனைக் கொன்றதன் தொடர்பில் பதின்மூன்று இளைஞர்கள் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
16 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவரும் மார்ச் 21-ஆம் தேதி இரவு 9 மணி முதல் மார்ச் 22-ஆம் தேதி காலை 7.38 மணி வரை லாஹாட் டத்து தொழிற்கல்லூரியின் தங்குமிட அறையில் முஹம்மத் நஸ்மி அய்சாட் முஹம்மத் நாருல் அஸ்வானைக் கூட்டாகக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின்படி அனைவரது மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இக்குற்றம் நிருப்பிக்கப்பட்டால் அதே குறியீட்டின் 34-வது பிரிவின்படி மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது 12-க்கும் குறைவான பிரம்படிகள் வழங்கப்படும்.
எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட கொலை வழக்கின் காரணமாக மாஜிஸ்திரேட் நூர் அசிரஃப் சோல்ஹானியின் முன் நடந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
இது சிறார் உட்படுத்திய வழக்கு என்பதால் காலை 9 மணிக்கு தொடங்கிய வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மட்டுமே நீதிமன்றத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ங் ஜூன் தாவ் முன்னிலையானார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் சார்பில் அமிருல் அமீன் ரஷித் மற்றும் கமருடின் முகமது சின்கி ஆகியோர் ஆஜராகினர்.
மீதமுள்ள 11 குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
ரசாயன அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக காத்திருக்கும் வேளையில், வழக்கை மீண்டும் குறிப்பிட மே 16-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm