நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார் 

சண்டாகான்: 

இரு படகுகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட நிலையில் ஒரு படகில் இருந்த ஆடவர் காணாமல் போனார். காணாமல் போனதாக நம்பப்பட்ட இளைஞர் நீரில் மூழ்கி மாண்டார். அவரை தீயணைப்பு மீட்புப்படையினர் சடலமாக மீட்டனர். 

இந்த சோக சம்பவம் பூலாவ் தஞ்சோங் பத்துவில் நிகழ்ந்தது. காணாமல் போன இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிம்ரான் அசாராப் எனும் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது. 

நள்ளிரவு 12 மணியளவில் தங்கள் தரப்பு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டதாகவும் மீட்புப்படையின் பேச்சாளர் தெரிவித்தார். 

நீரில் மூழ்கிய ஆடவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இறந்த ஆடவரின் சடலம் பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நள்ளிரவு 12 மணியளவில் இரு படகுகளும் ஒன்றோடு ஒன்று மோதியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset