செய்திகள் மலேசியா
காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்
சண்டாகான்:
இரு படகுகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட நிலையில் ஒரு படகில் இருந்த ஆடவர் காணாமல் போனார். காணாமல் போனதாக நம்பப்பட்ட இளைஞர் நீரில் மூழ்கி மாண்டார். அவரை தீயணைப்பு மீட்புப்படையினர் சடலமாக மீட்டனர்.
இந்த சோக சம்பவம் பூலாவ் தஞ்சோங் பத்துவில் நிகழ்ந்தது. காணாமல் போன இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிம்ரான் அசாராப் எனும் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணியளவில் தங்கள் தரப்பு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டதாகவும் மீட்புப்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நீரில் மூழ்கிய ஆடவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இறந்த ஆடவரின் சடலம் பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில் இரு படகுகளும் ஒன்றோடு ஒன்று மோதியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm