நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பையா! பிரமாண்டமாக வெளியீடு செய்கிறார் டிஎஸ்ஜி

கோலாலம்பூர்: 

2010-ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 2-ஆம் தேதி திருப்பதி பிரதாஸ், சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த பையா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

கார்த்தி, தமன்னா பாத்தியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படம் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி காதலால் இதயங்களைக் கொள்ளையிட்டது.

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பையா திரைப்படத்தைப் பிரமாண்டமாக வெளியீடு செய்கிறார் கலைத் துறை நாயகன் டிஎஸ்ஜி ராஜா.

ரன், ஆனந்தம், சண்டக்கோழி ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமிக்குப் பையா திரைப்படம் மிகப் பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. இத்திரைப்படத்தில் கார்த்தி, தமன்னா ஜோடியின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

அதோடு இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

அண்மைய காலமாக மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு வருகின்றன, இந்நிலையில் பையா திரைப்படம் வெளியீடு செய்யப்படுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், டிஎஸ்ஜி தமது சமூகத் தளத்தில் பையா திரைப்படத்தை மறு வெளியீடு செய்யவிருப்பதாக அதிரடியாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது கலைத் துறையில் முழுமையுமாகக் கவனம் செலுத்தும் டிஎஸ்ஜி, பையா திரைப்படம் இம்மாதம் மத்தியில் மறு வெளியீடு செய்யப்படலாம் என்பதையும் சூசகமாகக் கூறியுள்ளார்.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset