நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மக்களவை தேர்தல்; முதல் ஆளாக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்குமார் 

சென்னை: 

தமிழ்நாட்டில் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

இந்நிலையில் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முதல் நபராக நடிகர் அஜித்குமார் வாக்களித்தார். 

வாக்களிக்க வந்த நடிகர் அஜித்குமார் தேர்தல் அதிகாரிகளிடம் தமது பெயர் விபரங்களைச் சரிப்பார்த்து கொண்டார். பின்னர் வாக்குச்சாவடியில் தமது வாக்கினை அவர் செலுத்தினார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவிற்கு அடுத்து பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset