நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகள் முடக்கம்

புது டெல்லி:

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்குச் சொந்தமான ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

"பிட்காயின்கள்' மூலம் முதலீட்டாளர்களுக்கு அதிக பணம் தருவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கடந்த 2017ம் ஆண்டு ரூ.6,600 கோடி மதிப்பிலான பிட்காயின்களை பெற்று பிட்காயின் மைனிங் மூலம் மாதம் 10 சதவீதம் வரை லாபம் பெற்றுத்தருவதாக முதலீட்டாளர்களிடம் இவர்கள் உறுதி அளித்துள்ளனர். எதுவும் திருப்பியளிக்கப்படவில்லை.

இதனால் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கின்கீழ் நடிகை ஷில்பா ஷெட்டியின் பெயரில் மும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, புணேவில் ஒரு பங்களா, ராஜ் குந்த்ரா பெயரிலான பங்குகள் என மொத்தம் ரூ.97.79 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset