செய்திகள் கலைகள்
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகள் முடக்கம்
புது டெல்லி:
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்குச் சொந்தமான ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
"பிட்காயின்கள்' மூலம் முதலீட்டாளர்களுக்கு அதிக பணம் தருவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து கடந்த 2017ம் ஆண்டு ரூ.6,600 கோடி மதிப்பிலான பிட்காயின்களை பெற்று பிட்காயின் மைனிங் மூலம் மாதம் 10 சதவீதம் வரை லாபம் பெற்றுத்தருவதாக முதலீட்டாளர்களிடம் இவர்கள் உறுதி அளித்துள்ளனர். எதுவும் திருப்பியளிக்கப்படவில்லை.
இதனால் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கின்கீழ் நடிகை ஷில்பா ஷெட்டியின் பெயரில் மும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, புணேவில் ஒரு பங்களா, ராஜ் குந்த்ரா பெயரிலான பங்குகள் என மொத்தம் ரூ.97.79 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 5:16 am
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
April 30, 2024, 4:31 pm
மலேசிய ரசிகர்களை வசீகரிக்கப் போகும் ஏஆர் ரஹ்மானின் கண்கவர் இசை நிகழ்ச்சி
April 30, 2024, 11:38 am
இசை பெரிதா? மொழி பெரிதா? கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்
April 29, 2024, 7:52 pm
நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி
April 25, 2024, 6:48 pm
ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணைகிறார்
April 21, 2024, 9:47 am
தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
April 20, 2024, 2:24 pm
ரோமியோ திரைப்படத்தை அன்பே சிவமாக ஆக்கிவிடாதீர்கள் : விஜய் ஆண்டனி
April 20, 2024, 11:12 am
நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகிறது
April 19, 2024, 5:29 pm