செய்திகள் கலைகள்
ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணைகிறார்
சென்னை:
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலிலுக்கு முன்பு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிக்கு ஆதரவளித்த நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படாததால் வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டார்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதை அடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைய கடிதம் அளித்துள்ளார்
தேர்தல் முடிந்த பிறகு கட்சியில் இணைவதற்கான கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய மன்சூர் அலிகான், “பிரதமரை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்.
இதன் மூலம் தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:53 am
ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சிக்கு மலேசியாவைச் சேர்ந்த அருளினி தேர்வு
May 3, 2024, 2:10 pm
பையா திரைப்படத்தையடுத்து அயன் திரைப்படத்தை மறு வெளியீடு செய்கிறார் டிஎஸ்ஜி
May 3, 2024, 11:46 am
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
May 2, 2024, 5:16 am
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
April 30, 2024, 4:31 pm
மலேசிய ரசிகர்களை வசீகரிக்கப் போகும் ஏஆர் ரஹ்மானின் கண்கவர் இசை நிகழ்ச்சி
April 30, 2024, 11:38 am
இசை பெரிதா? மொழி பெரிதா? கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்
April 29, 2024, 7:52 pm
நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி
April 21, 2024, 9:47 am